திருநெல்வேலி – மே – 17,2025
Newz – Webteam


திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஷிபா மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்களும் அவர்களது குடும்பத்தினருக்கும் உடல் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, கண்பார்வை பரிசோதனை, பல் மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு தாது அடர்த்தி, ஹீமோகுளோபின் அளவு, ஆக்சிஜன் அளவு, இதய பரிசோதனை, வெரிகோஸ் மற்றும் சிறுநீரக கல்லடைப்பு போன்ற பரிசோதனைகள் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
0 Comments