மதுரை – அக் -11,2023
newz – webteam
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. சிவபிரசாத், I.P.S., உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் சம்பந்தமான புகார்களில் கடந்த இரு மாதங்களில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூ.16,65,200/-(பதினாறு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து இரு நுாறு மதிப்புள்ள 100 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1,75,07,600/- (ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து ஏழாயிரத்து அற நுாறு) மதிப்புள்ள 1207 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொது மக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கையால் கடந்த இரு மாதத்தில் ரூ.4,47,500/- நான்கு லட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து ஐநாறு) யும் இதுவரை ரூ. 48,76,305/- (நாற்பத்து எட்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரத்து முந்நுாற்று ஐந்து) உரியவர்களுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும். மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் இன்வெஸ்மென்ட் ஆஃப்்- களை நம்பியும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் லோன் ஆஃப்களை களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்யை அட்டன்ட் செய்ய வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும்,ரிமோட் அக்ஷஸ் ஆஃபகளான Anydesk, Team Viewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் Cyber Crime Help line No. 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என மதுரை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்





0 Comments