மெச்சதகுந்த பணிக்காக 5,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 38,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…..


தூத்துக்குடி – அக் -07,2023

newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர் உட்பட 38 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நாலாட்டின்புதூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகள், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் மற்றும் 6 கண்ணக்களவு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 1 எதிரி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 6,85,000/- மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் மற்றும் வீடியோ கேமரா ஆகியவற்றை மீட்;ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், உதவி ஆய்வாளர் . காந்தி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில், கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலை முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர் ஸ்டான்லி ஜான், காவலர் திரு. வீரபெருமாள் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சந்தேக மரண வழக்கை துரிதமான முறையில் விசாரணை செய்து சந்தேக மரணம் இல்லை என்றும் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் என்றும் கண்டுபிடித்து, கொலை செய்த எதிரியை கைது செய்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், தலைமை காவலர் சண்முகநாதன், முதல் நிலை காவலர்கள் முத்தமிழ்ராஜ் மற்றும் . கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 20 வருடம் சிறைக்காவல் தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்று தந்த வழக்கில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திருமதி. மாரியம்மாள், பெண் தலைமை காவலர் மயில்கனி மற்றும் பெண் காவலர் ஜெபமேரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு எஞ்சிய ஆயுட்காலம் முழுவதும் சிறைதண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்று தந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரிமனோகரி, உதவி ஆய்வாளர் மேரி, பெண் தலைமை காவலர் லெட்சுமி, தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜபிள்ளை ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1985ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 21 ஆண்டுகள் சிறையிலிருந்து பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதியை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் விசு ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகளுக்கு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றிய திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குமார், தலைமை காவலர் திரு. ராஜ்பரத் மற்றும் காவலர் . மனோகரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

லோக்அதலாத்தின்போது ஆறுமுநேரி காவல் நிலைய 76 வழக்குகளை நீதிமன்றத்தில் முடித்த ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் பரணி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய மோசடி வழக்கில் 2015ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பிடியாணை எதிரியை பிடித்து கொடுத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் உலகநாதன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் முத்துமாரி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட 4 ரவுடிகளை கைது செய்து நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பையா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆறுமுகதுரை, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் அனுவிந்த்குமார் மற்றும் கடம்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பூவரசு ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வி.ஏ.ஓ கொலை வழக்கில் 57 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து, 143 நாட்களில் எதிரிகள் இருவருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 449ன்படி 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 1000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506 (ii)ன்படி ஒரு வருடம் கடுங்காவல் சிறைத் தண்டணையும் தண்டனை பெற்று தந்த மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

5 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format