


ஆவடி – ஜீலை – 29,2025
Newz – Webteam
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட 78 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 730 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு
ஆவடி காவல் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுபடி கஞ்சாவை அழிப்பதற்கு ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, இ.கா.ப., ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., மற்றும் தடய அறிவியல் துணை இயக்குநர் ஷாபியா ஜோசப் ஆகியோர்கள் கொண்ட போதை பொருள் அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்று செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள G.J. Multiclave India Pvt Ltd என்ற நிறுவனத்தில் உள்ள Insulator-ல், 78 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 730 கிலோ எடை கொண்ட கஞ்சாவை ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, இ.கா.ப., ஆவடி காவல் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா இ.கா.ப., தடய அறிவியல் ஆய்வாளர் மோகன், ஆவடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையாளர் பொன்சங்கர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களால் எரித்து அழிக்கப்பட்டது
ஆவடி காவல் ஆணையரக காவல் எல்லையில் இந்த வருடத்தில் (2025) ஏற்கனவே 105 வழக்குகளில் சம்மந்தப்பட்ட 850 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
0 Comments