சைபர் க்ரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் 76,சைபர் குற்றவாளிகள் கைது …


சென்னை – ஜீன் – 05,2025

Newz – Webteam


இணைய வழி குற்றப்பிரிவு மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி கைது நடவடிக்கை ஆபரேஷன் திரைநீக்கு 2 முடிவுக்கு வந்தது


தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களுக்கு எதிரான ஒரு துரிதமான நடவடிக்கையில் தமிழ்நாட்டின் இணைய வழி குற்றப்பிரிவு 2024 டிசம்பர் 6,7 மற்றும் 8 நாட்களில் ஆபரேஷன் திரைநீக்கு-1ஐ  நடத்தி, மாநிலம் முழுவதும் 76 சைபர் குற்றவாளிகளை வெற்றிகரமாக கைது செய்தது.

இந்த சிறப்பு கைது நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக ‘ஆபரேஷன் திரைநீக்கு -II” 2025 ஜூன 2 ஆம் தேதி தொடங்கி 2025 ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்தது இணைய வழி குற்றப் பிரிவின் காவல்துறை துணை தலைவர் டாக்டர் சந்தீப் மிட்டல் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரங்களிலும் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து இணைய வழி குற்றப்பிரிவின் நேரடி கண்காணிப்புடன் நடைபெறப்பட்டது.


இந்த பெரிய அளவிலான நடவடிக்கை குற்றவாளிகள் தொடர்பான விஞ்ஞான விசாரணை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) உள்துறை அமைச்சகம் செயல்படுத்தும் தேசிய சைபர் கரைம் அறிக்கையிடல் தளம் (National Cyber Crime Reporting Portal)மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுயவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சைபர் குற்ற வலையமைப்புகளின் நிதி தரவுகள் மற்றும் வங்கிக் கணக்குகளின் பணப்பரிவர்த்தனை ஆய்வுகள் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையை இணைய வழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி | ஷஹ்னாஸ், இ.கா ப, அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரத்திலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இணையவழி குற்றப்பிரிவின் தலைமையாகதில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் மொத்தம் 136 சைபர் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழக சைபர் குற்ற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 159 வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கையில் 30க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலி வங்கிகனாக்குகளை உருவாக்கி பயன்படுத்தும் ஒரு கும்பலின் பின்னால் செயல்படும் 6 பேர் கொண்ட ஒரு குழு அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இத்தகைய கைதுகள் மாநிலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களை தடுப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கின்றன இதில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட்கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேசிய அளவில் நடத்திய பெரிய அளவிலான சைபர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் விசாரணைகள் தொடர்கின்றன. இணைய வழி குற்றப்பிரிவு
தலைமையகத்தினால் கைதானவர்களிடமிருந்து டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, இந்தியா முழுவதும் பரவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளின் மற்ற தகவல்களை வெளிக்கொணர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கைது செய்தவர்களுடன் தொடர்புடைய சைபர் மோசடி கும்பலின் மற்ற உறுப்பினர்களைக் கண்காணித்து கைது செய்வதற்கும், மோசடி செய்பவர்களின் நிதியைக் கண்டுபிடிப்பதற்கும், நாடு முழுவதும் சைபர் கிரைம் நடவடிக்கைகளுடன் பரந்த தொடர்புகளைக் கண்டறிவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப  இணைய வழி குற்றப் பிரிவின் இந்த திட்டமிடப்பட்ட செயல்பாட்டை பாராட்டி, தமிழகத்தில் செயல்படும் சர்வதேச சைபர் குற்ற கும்பலை ஒழிக்க எடுத்துள்ள அசாத்திய முயற்சியென புகழ்ந்துள்ளார்

. இணையத்தில் பாதுகாப்பை பராமரிக்க இணையவழி குற்றப்பிரிவு பொதுமக்களுக்கு பின்வரும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுரை:
கடவுச்சொற்கள், ஓடிபி அல்லது வங்கி தகவல் போன்ற முக்கியமான விவரங்களைப் பகிர்வதைத தவிர்க்கவும்,முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து அவசர தேவைக்கு பணம் கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் கூறுஞ்செய்திககளுக்கு பதில் அளிக்காதீர்கள்
ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மோசடி சமூக ஊடக தளங்கள் மற்றும் சுயவிவரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
உண்மையாக இருப்பது அல்லது மிகவும் லாபகரமானது என்று தோன்றும் சலுகைகள் குறித்து கவனமாக இருங்கள்.
கமிஷன்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கை ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கவும். நம்பமுடியாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்
பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இரண்டு காரணி அங்கீகாரத்தை கடவுச்சொற்களை தவறாமல் புதுப்பிக்கவும். செயல்படுத்தவும், உங்கள்
புகார் அளிக்க:
நீங்கள் ஏதேனும் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும். ஐ டயல் செய்யவும்


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format