மதுரை – ஜீன் – 15,2025
Newz – Webteam
மதுரை கடந்த 14.06.2025ம் தேதி அதிகாலை 1.00 மணியளவில் மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த தலைமை காவலருடன் வாய்தகராறில் ஈடுபட்டதோடு, கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்


இதுகுறித்து V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண்:16/2025 என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில் V.சத்திரப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட V.வெங்கடஜலபுரத்தை சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன் என்கின்ற போராளி பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் என தெரியவந்தது.
தலைமறைவான எதிரிகளை கைது செய்ய உசிலம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு பேரையூர் உட்கோட்டம்) தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று 15.06.2025 பிரபாகரன் என்கின்ற போராளி பிரபாகரன் என்பவர் T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட நல்லியதேவன்பட்டி செல்லும் சாலையின் அருகே பதுங்கி இருப்பதாக தெரியவந்தது, தனிப்படையினர் அவ்விடம் சென்று அவரை பிடிக்க முயற்சி செய்த பொழுது, அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து அருகில் இருந்த பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவருடைய வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு, பேரையூர் அரசு மருத்துவமணையில் அனுமதித்து சிகிச்சை பெற்று, அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருடன் சம்பவத்திற்கு வந்தது V.சத்திரப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட V.வெங்கடஜலபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அய்யனார் என்கின்ற முருகன் என்பவரை T.கல்லுப்பட்டி விருதுநகர் ரோட்டில் உள்ள V.சத்திரப்பட்டி சந்திப்பில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
தொடர் விசாரணயிைல் மேற்படி சம்பவத்திற்கான காரணம், பிரபாகரன் என்கின்ற போராளி பிரபாகரன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் அவரை தணிக்கை செய்த போது அவர் ஆஜரில் இல்லாமல் இருந்ததால், மதுரை மாவட்ட காவல் துறையினர் அவரை தொடர்ந்து தேடிவந்த நிலையில், கடந்த 13.06.2025ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் ஒரு வழக்கு விசாரணைக்காக பிரபாகரன் என்கின்ற போராளி பிரபாகரனின் தந்தை முத்துவேல் என்பவரை அழைத்து சென்ற காரணத்தினால், கோபமடைந்த பிரபாகரன் என்கின்ற போராளி பிரபாகரன் தனது நண்பர் அய்யனார் உடன் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த தலைமை காவலருடன் வாய்தகராறில் ஈடுபட்டதோடு, கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக தெரியவருகிறது.
0 Comments