கன்னியாகுமரி – ஜீலை -18,2025
Newz – Webteam
அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தடகளப் போட்டியில் மூன்று தங்கங்கள் பெற்று அசத்திய கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R.ஸ்டாலின் IPS பாராட்டு
காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை நடத்திய உலக அளவிலான தடகள போட்டியானது கடந்த 27.06.2025 முதல் 06.07.2025தேதி வரை அமெரிக்காவில் அலபாமாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற்றது.
இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா அவர்கள் உயரம் தாண்டுதல் (High Jump) மற்றும் மும்முறை தாண்டுதல் (Triple Jump) மற்றும் 100மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்
மேற்படி தலைமை காவலர் . கிருஷ்ணரேகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இ.கா.ப இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் பாராட்டி வாழ்த்தினார்.


0 Comments