
திருநெல்வேலி – மே – 30,2025
Newz – Webteam
திருநெல்வேலி மாநகரம்
இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டிற்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.
சமுதாயத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான மற்றும் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை, முகநூலில் பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டிற்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, சமுதாயத்தில் உள்ள மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன்மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் வினைவிக்கும் வகையில்
செயல்பட்ட திருநெல்வேலி பாளையங்கோட்டை விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த கனி மகன் ஷேக் முகமது(48) என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், (கிழக்கு) வினோத் சாந்தாராம், காவல் உதவி ஆணையர் (பாளையங்கோட்டை சரகம்) .சுரேஷ் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) க.பொன்ராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. ஆணைப்படி 30.05.2025-ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்
0 Comments