


ஆவடி – மே – 31,2025
Newz – Webteam
84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 70 கிலோ கிராம் எடை கொண்ட
கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு
ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை அழிக்க நடவடிக்கை எடுக்க ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப. உத்திரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 85 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.
மேற்படி நீதிமன்ற உத்தரவு பெறப்பட்ட கஞ்சாவை அழிப்பதற்கு ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்திரவின் பேரில், ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் K.பவனீஸ்வரி. இ.கா.ப ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர். ஐமன் ஜமால், இ.கா.ப, மற்றும் தடய அறிவியல் உதவி இயக்குநர் ஷோபியா ஆகியோர்கள் கொண்ட போதை பொருள் அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள G.J. Multiclave India Pvt Ltd என்ற நிறுவனத்தில் உள்ள Insulator ல் மேற்படி 84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 70 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் போதைப்பொருளினை மேற்படி குழுவினர் மற்றும் ஆவடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையாளர் பொன்சங்கர் ஆகியோரால் எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் இதே போன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக 106 வழக்குகளில் சம்மந்தப்பட்ட 721 கிலோ கிராம் 61600元 கொண்ட கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது
0 Comments