கன்னியாகுமரி – மே -31,2025
Newz – Webteam
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் CCTV இலக்கு
மே 31.
கடியப்பட்டினம் கிராமத்தில் ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் CCTV கேமரா…. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS திறந்து வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டாக்டர். R. ஸ்டாலின் IPS முன்னெடுப்பான ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்( ஒரு காவலர் -இரண்டு CCTV) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது.
இந்த திட்டமானது காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறிக்கோளான அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கை எட்டுவதற்கும் இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 640 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று கடியப்பட்டினம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இடையே கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்தில் குளச்சல் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கெளதம் பிரவீன் IPS, மணவாளக்குறிச்சி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் ஊர்பொதுமக்கள் உடனிருந்தனர்.



0 Comments