நாகப்பட்டினம் – ஜீன் -04,2025
Newz – Webteam



மத்திய மண்டல ஐஜி இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் . அதன் பிறகு காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 04.06.2025 திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் .ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப மாவட்ட காவல் அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார் அதன்பின்பு வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதில் 100 kg கஞ்சா மற்றும் 121 kg புகையிலைப் பொருட்களை கடத்த முயன்ற குற்றவாளிகளை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
. மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராய பாட்டிகள் கடத்த முயன்ற 17 குற்றவாளிகளை விரைந்து கைது செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். அப்பொழுது நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.K. அருண் கபிலன் இ.கா.ப உடனிருந்தார்.
0 Comments