

நெல்லை – மே -13,2025
Newz. – Webteam
திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் கோடைகாலத்தில் போக்குவரத்து பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு வெப்பத்தை தணிக்க கழுத்தில் அணியும் பேட்டரியில் இயங்கும் சிறிய ரக மின் விசிறிகளை திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் திருநெல்வேலி கிளை சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) வினோத் சாந்தாராம் மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு விசிறிகளை வழங்கினார்
உடன் காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து ) அசோக் குமார் மற்றும் பாளை போக்குவரத்து ஆய்வாளர் செல்லதுரை மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments