மெச்சதகுந்த பணிக்காக 2,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 32,போலீசாருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி மாவட்ட எஸ்பி பாராட்டு…


தூத்துக்குடி – பிப் -17,202

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பசுவந்தனை காவல் நிலைய திருட்டு வழக்கில் வழக்குபதிவு செய்த அன்றே வழக்கின் எதிரியை கைது செய்து, வழக்கின் சொத்தான ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 25 கிலோ காப்பர் வயரை கைப்பற்றி, எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய பசுவந்தனை காவல் நிலைய காவல் ஆய்வாளர் . முத்துமணி, உதவி ஆய்வாளர் ரவீந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மார்த்தாண்டபூபதி, முதல் நிலை காவலர்கள் பெரியசாமி,  பிரான்சிஸ் சேவியர்,  அனந்தகிருஷ்ணன் மற்றும்  முனியசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் மற்றும் அவரது குழந்தை காணாமல் போன வழக்கில் அவர்கள் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து மீட்ட ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காவலர்  முத்துக்குமார், முதல் நிலை காவலர்  பென் ஜான்சன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தபூமங்களம் அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்து, அதில் இருந்த 520 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கைப்பற்றிய ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  முத்து மற்றும் முதல் நிலைக் காவலர்  முத்துசெல்வம் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,500/- அபராதமும் தண்டனையாக பெற்றுதர உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  முத்து வீரப்பன், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் காவலர்கள்  முத்துலட்சுமி,  வெள்ளைச்சாமி மற்றும் முறப்பநாடு காவல் நிலைய காவலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு சம்மன் சார்பு செய்தும், நல்ல முறையில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதமும் பெற்றுத்தர உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ், முதல் நிலை காவலர் சந்திரா மற்றும் காவலர் அண்ணாதுரை ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி வழியாக திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலை கல்லால் தாக்கி சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்த மணியாச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், நாரைக்கிணறு காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் விடுதலை பாரதி கண்ணன் மற்றும் மணியாச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்  மதிவாணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலுவையில் இருந்த பிடியாணை நபரை  கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர்கள்  அப்பாதுரை,  சதீஷ்குமார் மற்றும் அருணாச்சலம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு 2 வருட சிறை தண்டனையும் ரூபாய் 5,000/- அபராதமும் பெற்றுத்தர திறம்பட செயல்பட்ட நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர் பெருமாள் அவர்களின் மெச்சத்குத்த பணிக்காகவும்,

முறப்பநாடு காவல் நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8வது நபரை  கைது செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய முதல் காவலர்கள்  மாரியப்பன் மற்றும்  செல்வகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சமன் சார்பு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதமும் பெற்றுத்தர திறம்பட செயல்பட்ட சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள்  இளையராஜா மற்றும் ரமேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் இருந்து வந்த மூன்று பிடிகட்டளைகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவலர் திரு. சோலையப்பன் என்பவரின் மெச்சத்தகுத்த பணிக்காகவும்,

2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 32 காவல்துறையினரின் சிறந்த பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format