திருநெல்வேலி – மார்ச் – 16,2025
Newz – Webteam

தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவனை சாதாரண உடையில் வந்த இரண்டு காவலர்கள் சந்தேகப்பட்டு அடித்து காயப்படுத்தியதாகவும் அவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி பரப்பப்படுகிறது.
ஆனால் இச்செய்தி முற்றிலும் தவறாக மிகைப் படுத்தப்பட்ட ஒன்றாகும். நடந்தது என்னவெனில் நேற்று முக்கூடல் பேருந்து நிலையத்தில் வைத்து அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சசிகலா என்பவரின் செல்போன் மற்றும் பர்ஸ் காணாமல் போனதாக மனு அளித்ததால் அதற்கு மனு ரசீது வழங்கிய பின்னர் முக்கூடல் பேருந்து நிலையத்தில் இதற்கு முன்பும் இது போன்ற சிறு சிறு திருட்டு வழக்குகள் நடைபெறுவதாக தெரிய வந்ததால் அதனை கண்டுபிடிக்க இரண்டு காவலர்கள் சாதாரண உடையில் அங்கு சென்று பணி செய்து வந்தனர்.
மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட போது சிறுவன் ஒருவன் சந்தேகப்படும்படி நிற்பது தெரிய வந்தது. அச்சமயம் அங்கு வந்த ஒரு சிறுவனை அழைத்து விசாரித்துவிட்டு அவரது தாயாருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காவலர்கள் யாரும் அச்சிறுவனை தாக்கவோ துன்பப்படுத்தவோ இல்லை. ஆனால் இதனை மிகைப்படுத்தி தவறான ஒரு செய்தியை வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.
0 Comments