கன்னியாகுமரி – ஜீன் – 10,2025
Newz – Webteam

மிகவும் அரிதான உயர்ரக போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குமரி வக்கீல் கைது. கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞரான, வடிவீஸ்வரம் பகுதியை சார்ந்த ராஜகுமார் என்பவரது மகன் சக்திவேல் (25) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதை பொருட்களான
மெத்தம் பேட்டமைன் – 12.08 கிராம் LSD ஸ்டாம்ப் – 0.42 மில்லி கிராம், பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கறிஞர் சக்திவேலை கோட்டார் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
0 Comments