கன்னியாகுமரி – ஜீன் -11,2025
Newz – Webteam


போலீசார் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அறிவுறுத்தல் கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல் நிலையத்திற்கு கேடயம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று நடைபெற்றது.
இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,திருட்டு குற்றங்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் திருட்டு வழக்கு குற்றவாளிகளை முறையாக கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்பட வேண்டும்
பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை செய்ய வேண்டும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்
மேலும் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு குற்ற வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கடந்த மே மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக இரணியல் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார்.
அதனை குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் IPS மற்றும் இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார், உதவிய ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன் மகேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments