தஞ்சை சரககத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு….


சென்னை -27,2024

Newz -webteam

,தமிழ்நாடு இரண்டு நாட்கள் தஞ்சாவூர் சரகத்தை ஆய்வு செய்தல்
தமிழ்நாடு முதலமைச்சர்  2023-ம் வருடம் தஞ்சாவூர் காவல் சரகத்தை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியதின் தொடர்ச்சியாக உயர்திரு. காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஷிவால், இ.கா.ப இரண்டு நாட்கள் தஞ்சாவூர் சரக மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்,

மத்திய மண்டல காவல் துறை தலைவர். கார்த்திகேயன், இ.கா.ப மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக்,இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகளுடன் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


26.07.24-ம் தேதி மதியம் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலந்தாய்வு கூட்ட அரங்கை திறந்து வைத்தும், பின்னர் தஞ்சாவூர் சரக காவல் அதிகாரிகளுடன் தஞ்சாவூர் சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும் மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும்,

கணிணி வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தக்க நிவாரணம் பெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பதற்காக வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சட்ட விரோதமாக விற்கப்படும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்

. 2024- ம் வருடம் தஞ்சாவூர் சரகத்தில் 215 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 293 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 775 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும், மேற்படி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் 23-ஐ பறிமுதல் செய்தும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செயலில் ஈடுப்பட்ட 11 எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் 2024-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை
பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை உணவு பாதுகாப்பு
அதிகாரிகளுடன் 2732 முறை சோதனை செய்து, 1001 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதில் 1031 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 7214 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், 836 கடைகளுக்கு உணவு பாதுபாப்பு அதிகாரிகளின் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 150 முறை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 337 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குவது பற்றியும் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.


அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வருடம் 15074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 15239 எதிரிகள் கைது செய்யப்பட்டும், 255 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டும், தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 373 வாகனங்களை அரசுக்கு ஆதாயம் தேடி ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும் Smart Kavalar APP என்ற செயலி மூலம் காவலர்களின் ரோந்து பணி, குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அழைப்பாணையை சார்பு செய்யும் பணி, நீதிமன்ற பணி மற்றும் காவலர்களின் அன்றாட பணிகளை மேற்கண்ட செயலி மூலம் நெறிபடுத்த தக்க அறிவுரைகள் வழங்கினார்.


மேலும் தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் உள்ள ரௌடிகளின் மேல்எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவர்களை கண்காணிப்பதற்காக தனி
காவலர்கள் அடங்கிய குழவை அமைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அறிவுரை வழங்கினார். தஞ்சாவூர் சரகத்தில் 2024-ம் வருடம் 438 ரௌடிகள் மீது நன்னடத்தை பிணை பத்திரம் பெற்றும், 4 ரௌடிகள் மீது நன்னடத்தை பிணையை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவலிலிருந்து பிணையில் வெளியில் வந்த 9 ரௌடிகளின் பிணையை ரத்து செய்தும், பிடிக்கட்டளை நிலுவையில் உள்ள ரௌடிகளுக்கு ஜாமீன் போட்ட 6 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட 31 ரௌடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் சரகத்தில் உள்ள 7 ரௌடிகளின் சொத்துக்களின் மீது நிதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு

வருகிறது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் கொலை வழக்குகளில்சம்பந்தப்பட்ட 9 ரௌடிகளுக்கு ஆயள்தண்டனையும்,
14 ரௌடிகளுக்குகடுங்காவல் தண்டனையும் நீதிமன்றத்தின் மூலம் பெற்று தரப்பட்டுள்ளது.இன்று காலை தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் உள்ள
காவலர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடத்தி, முகாமில் 482 காவல்
அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்தும் அவர்களின்
குறைகளின் மீது சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து உடனடி தீர்வுகண்டார்.

தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட
குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்களில் திருடுபோன பொருட்களை
மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தும், மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில்
ஈடுபடும் ரௌடிகளை கைது செய்த 67 காவல் துறை அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு பணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மேலும் தஞ்சாவூர் சரகத்தில் புதிதாக கட்டப்படும் காவலர் குடியிருப்புகள்,
காவல் நிலையங்கள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின்
பழுதுகளை கண்டறிந்து அவைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format