


தூத்துக்குடி – மார்ச் – 08,2025
Newz – Webteam
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் உதவி எண் 181-ஐ விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவக்கி வைத்தார்.
இந்ந நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் காவல் துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி மாரத்தான் நிகழ்ச்சி தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பிலிருந்து துவங்கி ரோச் பூங்காவிலும், அதேபோன்று வாக்கத்தான் நிகழ்ச்சி தூத்துக்குடி பழைய துறைமுகம் சந்திப்பிலிருந்து துவங்கி ரோச் பூங்காவிலும் நிறைவடைந்தது.
பின்னர் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மேற்படி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப உட்பட காவல்துறையினர் உடன் இருந்தனர்.
0 Comments