கன்னியாகுமரி – செப் -08,2025
Newz – Webteam

ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு அலுவலில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவித்தார்
- குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்ற வேண்டும்.
- போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை விரைவுப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர வேண்டும்
- திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்
ஆகஸ்ட் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். அதனை நாகர்கோவில் பொறுப்பு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments