சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தபடும் 4430, எண்கள கண்டுபிடிப்பு


சென்னை -அக் -20,2024

Newz – limton

“மையப்படுத்தப்பட்ட சர்வதேச அவுட் ரோமர் சிஐஓஆர்* அறிமுகப்படுத்துவது

குறித்த செய்திக் குறிப்பு

ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களில் 4430 போலி எண்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் பதிவாகியுள்ளன

தொலைத்தொடர்புத் துறை (DoT) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் TSP: இணைந்து CIOR அமைப்பை சென்ட்ரலைஸ்டு இன்டர்நேஷனல் அவுட் ரோமர்) அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய தொலைத்தொடர்பு சந்தாதாரர்களை மோசடியான சர்வதேச போலி அழைப்புகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மேம்பட்ட சேவை ஆகும். சிஐஓஆர் சேவை இந்திய எண்களில் இருந்து வரும் போலியான அழைப்புகளை கண்டறிகிறது. இந்த சேவையின் நோக்கமானது போலி அழைப்புக்கள் சந்தாதாரர்களை அடைவதற்கு முன்பு இந்த அழைப்புகளை நிறுத்துவதே ஆகும்.

இது தொடர்பாக சென்னை அசோக் நகர் தலைமையகத்தில் 17:102024 அன்று நடைபெற்ற கலந்தாய்வுகூட்டத்தில் இணைய குற்றப் பிரிவு கூடுதல் இயக்குநர் டாக்டர் சந்தீப் மிட்டல் தலைமையில் தொலைத்தொடர்புத் துறை மற்றும் ஜியோ, பிஎஸ்என்எல். ஏர்டெல் வோடபோன் போன்ற அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (டிஎஸ்பி)

அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மோசடி செய்யப்பட்ட அழைப்புகளை அடையாளம் காண்பதற்கும் தடுப்பதற்கும் உள்ள வசதிகள் குறித்து தொலைத் தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் (தொலைத் தொடர்பு: சுதாகர் ஐடிஎஸ் அவர்களுடன் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக உள்வரும் போலியான அழைப்புகளைத் தடுப்பதற்கான புதிய அம்சத்தின் பல்வேறு சாத்தியங்கள் மற்றும் குறைபாடுகள் விவாதிக்கப்பட்டு தற்போதுள்ள அமைப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

பெரும்பாணன போலி அழைப்புகள் இணையாழி ஒலி பரிமாற்ற அழைப்பாக இருப்பதால் வாட்ஸ்அப் ஸ்கைப் போன்றவற்றின் மூலம் வரும் அழைப்புகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டு ஒரு முன்மொழிவு செய்யப்பட்டது இதன் விளைவாக, ஸ்கேம் அழைப்புகளின் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் படிஎஸ்பி) மற்றும் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து

தரவுகளை சேகரிக்க சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து திட்டமிட்டுள்ளது.

இது எவ்வாறு செயல்படுகிறது

அதிநவீன வழிமுறைகளைக் கொண்ட இந்த அமைப்பு உள்வரும்செய்யப்பட்டது இதன் விளைவாக ஸ்பேம் அழைப்புகளின் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (டிஎஸ்பி) மற்றும் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (டிஓடி) தரவுகளை சேகரிக்க சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து திட்டமிட்டுள்ளது


இது எவ்வாறு செயல்படுகிறது

அதிநவீன வழிமுறைகளைக் கொண்ட இந்த அமைப்பு, உள்வரும் அழைப்புகளின் அடையாளத்தை (சி எல் ஐ) பகுப்பாய்வு செய்கிறது. இது முரண்பாடுகளை அடையாளம் கண்டு நிகழ்நேரத்தில் போலி அழைப்புகளைத் தடுக்கிறது சந்தாதாரர்கள் சந்தேகத்திற்கிடமான போலி அழைப்புகளை சஞ்சார் சாதி தளத்தில் உள்ள சாகூஜு போர்டல் வழியாக புகாரளிக்கலாம் இந்த பதிவிடுதல் மூலம் இந்த சிஐஓஆர் சேவையின் துல்லியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவும். இந்த முயற்சி இந்தியாவின் தொலைத்தொடர்பு வலையமைப்பை மோசடி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது.

பொதுமக்களுக்கான அறிவுரை

சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

இந்திய தொலைபேசி எண்களிலிருந்து பெறப்பட்டதாகத் தோன்றினாலும். சந்தேகத்திற்கிடமான அல்லது அசாதாரணமானதாகத் தோன்றினால் அழைப்புக்களை எடுக்க வேண்டாம் இந்த அழைப்புகள் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் சைபர் குற்றவாளிகளால் அழைக்கப்படலாம்

2 ஸ்பூய் செய்யப்பட்ட அழைப்புகளைப் புகாரளிக்கவும்

ஒரு ஸ்பூய் போலியான அழைப்பை நீங்கள் சந்தேகித்தால், சஞ்சார்சாதி தளத்தில் உள்ள சக்ஷுபோர்ட்டல் மூலம் உடனடியாக புகாரளிக்கவும்

அழைப்புகளில் கவனமாக இருங்கள்

அறியப்படாத எண்ணிலிருந்து குறிப்பாக சர்வதேச அல்லது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் எண்களிலிருந்து ஒரு அழைப்புதவறிய அழைப்பாக இருந்தால் நேரடியாக மீண்டும் அழைப்பதைத் தவிர்க்கவும் ஸ்பூய் செய்யப்பட்ட அழைப்புகள்உங்களை பிரீமியம் விகித எண்களை அழைக்க பயன்படுத்தலாம்

4 அழைப்பு தடுப்பு அம்சங்களை இயக்கவும்

தேவையற்ற அல்லது சந்தேகத்திற்கிடமான சர்வதேச அழைப்புகளைத் தடுக்க தொலைத்தொடர்பு சேவையில் அமையப் பெற்ற உள்வசதிகளை பயன்படுத்திதடுக்கவும்

5 சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை நிறுத்தி வைக்கவும்
தொலைத்தொடர்பு சேவையில் அமையப் பெற்ற உள்வசதிகளை பயன்படுத்திதடுக்கவும்.

5.சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை நிறுத்தி வைக்கவும்

பணம் செலுத்துமாறு ஒரு அழைப்பாளர் உங்களுக்கு அழுத்தம் கொடுத்தால், தனிப்பட்ட தகவல்களை வழங்க சொல்லியும் அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியிருந்தாலும் உடனே அழைப்பை துண்டிக்கவும்.

  1. ஸ்பூயிங் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள்

ஸ்பூயிங் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்கள். வங்கிகள் அல்லது பழக்கமான தொடர்புகள் போன்ற நம்பகமான ஆதாரங்களாக ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அறிக்கையிடல்

நீங்கள் இதே போன்ற மோசடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால். உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம் சைபர் கிரைம் டோல்ஃப்ரீ ஹெல்ப்லைன் எண் 1930 ஐ டயல் செய்வதன் மூலம் அல்லது www.cybercrime gov.in இல் புகார் அளிக்கவும்


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format