
தூத்துக்குடி – டிச -09,2025
Newz – Webteam
திருச்செந்தூர் கும்பாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா ஆகிய திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
இந்த ஆண்டு திருச்செந்தூர் உட்கோட்டத்தில் நடைபெற்ற திருச்செந்தூர் கும்பாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா ஆகிய திருவிழாக்கள் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மேற்படி திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினரை பாராட்டும் விதமாக திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஏற்பாட்டின் படி இன்று திருச்செந்தூர் உதயம் இன்டர்நேஷனல் மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மேற்படி திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடன் இருந்தனர்.

0 Comments