கன்னியாகுமரி – மே -17,2025
Newz – Webteam


சுமார் 55 லட்சம் மதிப்புள்ள 335 மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS உத்தரவிட்டார்
உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 55,27,000 (ஐம்பத்தி ஐந்து இலட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாய்) மதிப்புள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்
மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் சுமார் 1,04,07,000/- (ஒரு கோடியே நான்கு இலட்சத்து ஏழாயிரம் ரூபாய்) மதிப்புள்ள 640 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது TamilNadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) என்ற காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். CEIR Portal (https://www.ceir.gov.in/) என்ற இணையதளத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து புகார் அளிக்கலாம்.
0 Comments