

தூத்துக்குடி -அக் -29,2024
Newz -webteam
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று தூத்துக்குடி துறைமுக பகுதிக்கு நேரில் சென்று பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
தூத்துக்குடி புதிய துறைமுக நிர்வாக அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உட்பட பல்வேறு துறை பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு புதிய துறைமுக ஆணைய தலைவர் தசுஷந்தகுமார் புரோஹித் ஐ.ஆர்.எஸ் அவர்களை சந்தித்து துறைமுகப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறைமுகப் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
0 Comments