திருநெல்வேலி – ஜீன் -06,2025
Newz – Webteam


திருநெல்வேலி மாநகரம். பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் நரிக்குறவர் காலனியில் 05.06.2025ஆம் தேதி ராமசந்திரன் மகன் பட்டவராயன் என்ற மாயா (19) என்பவரது உறவினரின் திருமணம் நடைபெற உள்ளது. உறவினர்கள் அனைவரும் திருமணத்தில் பங்கேற்றனர்
. இந்நிலையில் நரிக்குறவர் காலனியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற பாக்கியராஜ் மகன் ஆதி(20) என்பவரை ஏன் இவ்வாறு வேகமாக செல்கிறாய் என்று கேட்டதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டத்தில் சுற்றியிருந்த குடும்பத்தாரும் ஒருவரை ஒருவர் கைகள் மற்றும் கற்களால் தாக்கியதில் சிறு காயம் அடைந்த 13 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்ததில், உரிய அனுமதியின்றி 08 நபர்கள் வெளியே சென்றனர்.
இது தொடர்பாக பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு தரப்பை சார்ந்த 09 எதிரிகளை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக அரிவாள் வெட்டு நடந்துள்ளது என வரும் செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments