கடலூர் – மே -31,2023
newz – webteam
சத்யபிரியா வயது 34 த/பெ சக்கரவர்த்தி, முத்தாண்டிகுப்பம் என்பவருக்கு கடந்த 23.11. 2022 ஆம் தேதி இணையதள மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தொடர்பு கொண்ட நபர் கூறியதால் வாதி சத்யபிரியா என்பவர் ரூபாய் 29435 பணத்தை லேசர் பே (Razor pay)மூலம் அனுப்பியதாகவும் அதன் பிறகு மேற்படி நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியாபிரியா கொடுத்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் மேற்படி லேசர்பே தனி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேற்படி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் தங்களது நிறுவனத்தின் மூலம் ஏமாற்றியது எனவும், எனவே பணத்தை பாதிக்கப்பட்ட வங்கி கணக்கில் திரும்ப செலுத்துமாறு அறிவுறுத்தின்பேரில் மேற்படி நபரின் கணக்கிலிருந்து 29435 பணம் திரும்ப அனுப்பி வைத்ததால் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாதிக்கப்பட்ட சத்யபிரியாவிடம் பணத்தை ஒப்படைத்தார்.
0 Comments