

மதுரை – மார்ச் -03,2025
Newz – Webteam
ஆட்டோவில் தவறவிட்ட நகைகள் மற்றும் செல்போனை பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு.
நேற்று 02.03.2025 மதுரை மாநகர் தவிட்டுசந்தையைச் பகுதியை சேர்ந்த திரு.சரவணகுமார் வயது 56/25 என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டுசந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கும்போது 15 பவுன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
இது குறித்து தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆட்டோவில் பயணிகளை இறக்கி விட்ட பின் ஆட்டோவில் ஒரு கைப்பை இருப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் 52/25 என்பவர் தான் ஆட்டோவில் மேற்படி பயணியை ஏற்றிய மஹால் பகுதிக்கு வந்து வேப்பையைஅவரிடம் ஒப்படைப்பதற்காகபார்த்துள்ளார்.
அந்த நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து போன் வந்ததை அடுத்து நேரடியாக நகைப்பை என்னிடம் உள்ளதை தெரிவித்து காவல் நிலையம் சென்று 15 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் இருந்த நகை பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் மேற்படி ஆட்டோ டிரைவர் நாகேந்திரனின் நேர்மையை பாராட்டிய காவல் ஆணையர் அவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து ரூபாய் ஆயிரம் வெகுமதி அளித்து பாராட்டினார்.
0 Comments